''சீனாவிற்கு 65 பேருடன் சென்ற மஹிந்த.. 400 ஆண்டுகள் சிறைத் தண்டனை .." விடுக்கப்பட்ட கோரிக்கை


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கைது   செய்யப்பட்டு 400 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட  வேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கடந்த 2010ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தின் போது நடந்த கடுமையான ஊழல்கள் காரணமாக  மகிந்தவை இவ்வாறு கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது இதனைத் தெரிவித்துள்ள அவர்,

சீனாவிற்கு 2010 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட பயணத்தின் போது 65 பேர் ஸ்ரீலங்கன் விமானசேவை விமானத்தில் அதிகாரபூர்வமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

ரணில் விக்ரமசிங்க விடயத்தில் அரசாங்கம் நடந்து கொண்ட முறையை நான் வரவேற்கின்றேன். ரணில் விக்ரமசிங்க செய்தது சரி என்று நான் கூறவில்லை. அவரது நிலையைப் பார்க்க எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவர்தான் என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தவர்.

ஆனால் இந்த வழக்கில், இந்த அரசாங்கம் அமைத்த முன்னுதாரணத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். அந்த முன்னுதாரணத்தின் அடிப்படையில், மகிந்த ராஜபக்ச போன்றவருக்கு சுமார் 400 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும்.

என்னுடைய நெருங்கிய கூட்டாளிகளாக இருந்தவர்கள் என்பதால், ஜெனரல்கள், பிரிகேடியர்கள், மேஜர்கள் மற்றும் கேணல்கள் உட்பட 35 சிரேஷ்; இராணுவ அதிகாரிகளை ஓய்வூதியம் இல்லாமல் இராணுவ சேவையிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் வெளியேற்றியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.